Friday, October 17, 2008

பெண் சிசு கொலை

யானறியேன் இரவு பகல்யாதென்று
அறிவேன் அவ்வன்பும் கதகதப்பும்
யானறியேன் என்னாள் வரை இவ்வுலகம்
அறிவேன் இது சிறுகாலம்தான்
யானறியேன் நான் ஆணா பெண்ணா
அறிவேன் என்னுள் மாறுதலை
யானறியேன் மறு சென்மம் செவி சாய்த்ததில்
அறிந்தேன் நேரிடலாம் மறு சென்ம மெடுக்க

இன்புற்றேன் பூக்கரமொன்று வருடுவதை மறுகணம்
உணர்ந்தேன் ஒருவித நடுக்கத்தை
இன்பமும் துன்பமும் கலந்த்தோ எதிர்காலம் எனில்
இவ்வறையன்றோ சொர்க்கலோகம்
போதுமென்றது என் வளர்ச்சியை இயற்கை
வெளி வந்தேன் அன்னையின் அலறலுடன்

கூசியது கண் அலறினேன் நான்
அரற்றினாள் மருத்துவச்சி ஐயோ பெண் குழந்தை
கதறினாள் அன்னை கதறுவான் அப்பன்
கதறுவாளா என்னைக் கொல்லவரும் அச்சென்மம்
மறந்துவிட்டாளே அவள் பெண்ணென்பதை.
யானறியேன் மாய்க்கச் சொன்னது யாரென்று
அறிந்தேன் பிறவியில் சிறந்தது மானிடமல்லவென்று.

2 comments:

Iyappan Krishnan said...

soRchuvai/porutchuvai nalla irukku

may be tuning it bit to shorten the poem would be better


i loved it

சிவா said...

நன்றி ஜீவா,
சுருக்குவதற்கு முயற்சிக்கிறேன் அடுத்த முறை.

வாசி