Saturday, November 8, 2008

காற்றில் மிதந்தவை

மலரும் மங்கையும்..

பூவே, அழகு உன் புன்னகை
நீ பூச்செடியிலிருந்தால்
மலரே, மணமன்றோ அக்காற்று
நீ மலரும் அத்தருணத்தில்
பூவும் மலரும் அக் கார்குழலில்
அழகன்றோ அவள் பாரினில்

=====++====

பாலையில் பணம்


காணாமல் போனதே
அம் மாலைப் பொழுது
காணாமல் போனதே
அந் நறுமணக்காற்று
காணாமல் போனதே
அக் குறும்பு பார்வை
கடல் கடந்து வந்தேனே
திரவியம் தேட
எங்கும் மணல் தானோ
மணலும் பணம் தானோ
விரகம் இது தானோ
விரதமும் இது தானோ
----------------------


பொக்கை வாய் சின்ன பாட்டி


முத்துப் பல் சிரிப்பு
தத்து பித்து பேச்சு
காணாமல் போச்சு
அம் மழலை பேச்சு
பாப்பா பெருசாச்சு
பல் விழுந்து போச்சு
பொக்கைப் பல் பாட்டி
எங்கே அந்தப் பல் போச்சு